புதுக்கோட்டையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் யாசகம் பெற பிச்சைக்காரர்களிடம் கோவில் ஊழியர் லஞ்சம் பெற்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டையில் கீழ ராஜ வீதியில் சாந்தநாதர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தை அமாவாசை தினத்தன்று பிச்சை எடுக்க வந்தவர்களிடம் கோவில் ஊழியர் இந்திராணி என்பவர் தலா 2,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் புரோகிதர்களிடமும் தலா ஆயிரத்து 600 ரூபாய் வாங்கியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து […]
