தேர்தல் வாக்குறுதி பொய்யாகி விட்டதாக மன்னார்குடி பிஆர் பாண்டியன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,500 ரூபாயும், கரும்புக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்குவோம் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். தற்போது இரண்டு பட்ஜெட் நிறைவடைந்துள்ள நிலையில் இதுகுறித்து எந்த பதிலும் தெரிவிக்காதது விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. இதனால் தேர்தல் வாக்குறுதி பொய்த்து விட்டதா என்று மன்னார்குடி பிஆர் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். […]
