மதுரை கே.கே.நகரை சேர்ந்த சிவராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, மதுரை கே.கே.நகர் விநாயகர் நகரில் பால் கடை நடத்தி வருகிறேன். வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் கடையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் இரவு நேரத்தில் பால் வியாபாரத்தை தடுக்கும் வகையில் அண்ணாநகர் போலீசார் தொந்தரவு செய்து வருகின்றனர். அத்தியாவசிய பொருளான பால் வியாபாரத்திற்கு பெரும் தடையாக போலீசார் […]
