தமிழகத்தில் நவம்பர் 5ஆம் தேதி முதல் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4. 2 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள் என ஆவின் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் […]
