சிறப்பாக நடைபெற்ற பால்குட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே வடசென்னிமலை பகுதியில் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் கடந்த 9-ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாகத் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து 4-ஆம் நாள் திருவிழாவில் கோட்டைமேடு பகுதியில் ஏராளமான பக்தர்கள் ஒன்று திரண்டு வழிபாடு நடத்தியுள்ளனர். அதன்பிறகு பக்தர்கள் […]
