நேற்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு பாலாபிஷேகம் செய்து இந்து அமைப்பினர் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பின் பிரதமரான ராஜீவ்காந்தி 1991 ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு தாக்குதலில் பலியான நிலையில் அவரது முப்பதாவது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையடுத்து பஞ்சாபின் லூதியானா நகரில் அவரது சிலைக்கு இந்து அமைப்பினர் பாலபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். இதில் […]
