தரைப்பாலம் வழியாக சென்ற பள்ளி வேன் 25 மாணவர்களுடன் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகு அணை வழியாக பரளை ஆற்றிற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. இதனால் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் செய்யாமங்கலம்-கொடுமலூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் கடந்த 10 நாட்களாக மூழ்கிய நிலையிலேயே காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று தரைப்பாலத்தில் சற்று குறைவான தண்ணீர் காணப்பட்டதால் தனியார் பள்ளி வேன் […]
