பின்னணி பாடகர் திரு எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னணி பாடகர் திரு எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 5ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களாக திரு எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் திரு எஸ்.பி.பி. சரண் தெரிவித்து வந்தார். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் திரு எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் […]
