சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் கொரோனா பாதிப்பால் மக்கள் மருத்துவர் பார்த்தசாரதி காலமானார். இவர் கடந்த 60 ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு மருத்துவ பார்த்து வந்தவர். இவர் ஆரம்பத்தில் 60 பைசாவுக்கு சிகிச்சை பார்த்து வந்தவர். தற்போது ரூபாய் 50 க்கு மருத்துவம் பார்த்து வந்தார். பள்ளி மாணவர்கள், முதியவர்களுக்கு கட்டணம் இல்லாமல் சிகிச்சை அளித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
