இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பிறந்த குழந்தைக்கு பெற்றோர்கள் பார்டர் என பெயரிட்டுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள் பலம் ராம் மற்றும் நிம்பு பாய் தம்பதியினர். இவர்கள் இருவர் உட்பட மொத்தம் 98 பேர் கொரோனா பரவலால் போடப்பட்ட லாக் டவுனுக்கு முன்பாக இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதற்கு இந்தியா வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நாடு திரும்பிய அவர்களை போதுமான ஆவணங்கள் இல்லை எனக்கூறி பாகிஸ்தான் அரசு அனுமதிக்க மறுத்து விட்டது. இதனைத்தொடர்ந்து செய்வதறியாது […]
