அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்கக் கூடாது என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெண் பயணியிடம் அத்துமீறல் செய்தால் ஆண் பயணியை பேருந்தில் இருந்து இறக்கிவிடலாம்; அல்லது காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்று பேருந்து நடத்துநருக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, ஆண்களே பேருந்தில் 14 நொடிக்கு மேல் பெண்களை பார்க்காதீங்க… அப்படி பார்த்தால் அது குற்றம்… எச்சரிக்கையாக இருங்க….
