நேற்று முன்தினம் பிரேசில் நாட்டின் தென் கிழக்கு நகரமான ஓரோ பெட்ரோ என்ற பகுதியில் உள்ள மலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும் வெடிப்பு சத்தத்துடன் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் அலறத் தொடங்கினர். இந்த திடீர் நிலச்சரிவால் மலையடிவாரத்தில் கட்டப்பட்டிருந்த 122 ஆண்டுகள் ( 1890-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ) பழமை வாய்ந்த பிரேசிலியா பங்களா தரைமட்டமானது. பின்னர் ஓரோ பெட்ரோ நகரம் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ சார்பில் அறிவிக்கப்பட்டது.
