புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை பாரதிய ஜனதா சூது – சூழ்ச்சியால், திட்டமிட்ட சதியால் கவிழ்த்து இருக்கிறது. இந்த ஆட்சி கவிழ்ப்பு மிக மோசமான ஒரு ஜனநாயக படுகொலை. இந்த போக்கு மிகவும் ஆபத்தானது. ஒட்டுமொத்த தேசத்திற்கே இது பெரும் தீங்கை விளைவிக்கும். இன்னும் சொல்லப்போனால் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்குமேயானால் அதை கூட எங்களால் கவிழ்த்து விட முடியும் என்று எச்சரிக்கை […]
