விடுதியில் இரவு நேரத்தில் நுழையும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாரதியார் பல்கலைக்கழகம் மருதமலை ரோட்டில் இருக்கிறது. அங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் வெளியூரில் இருந்து படிக்க வரும் மாணவர்கள் அங்குள்ள கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். அங்குள்ள செல்லம்மா விடுதியில் 3000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அரைகுறை ஆடையுடன் இரு மர்மநபர்கள் […]
