தமிழகம் முழுவதும் பாயும் ஆறுகளின் தளத்தை கண்காணிப்பதற்கு 14 இடங்களில் நிரந்தர நீர் தரக் கண்காணிப்பு நிலையம் அமைப்பதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், வனத் துறை வெளியிட்ட அரசாணையில், காவிரி, பவானி, நொய்யல், தாமிரபரணி உள்ளிட்ட 14 இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நிரந்தர நீர் தர கண்காணிப்பு ஆணையம் அமைப்பதற்கு தேவையான நிலம் பொதுப்பணித்துறை அல்லது மாவட்ட ஆட்சியரிடம் இருந்து திட்டமிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. […]
