பாம்பு கடித்து குழந்தை இறந்த விவகாரத்தில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் அருகே இருக்கும் காட்டாத்துத்துறையை சேர்ந்தவர் சுரேந்திரன். கூலி தொழிலாளியான இவருக்கு ஷிஜிமோள் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் நாலரை வயதில் சுஷ்விகா மோள் என்ற மகளும் இருந்தனர். சுரேந்திரன் தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து குழந்தைகளையும் மனைவியையும் துன்புறுத்தி வந்த நிலையில் சென்ற 13-ஆம் தேதியும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகாத வார்த்தைகளால் திட்டி முடியை […]
