பாம்பன் தூக்குபாலத்தின் வழியாக 20க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்ற காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து சென்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில்வே தூக்குபாலம் உள்ளது. இந்த பாலத்தை கடந்து செல்வதற்காக கடந்த 2 நாட்களாக நாகபட்டினத்திலிருந்து தூத்துக்குடி கன்னியாகுமரி செல்வதற்கு 20க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகளும், மங்களூருக்கு செல்வதற்கு கோட்டியா என்ற பாய்மர படகு ஆகியவை காத்திருந்துள்ளது. இதனையடுத்து பாம்பன் புதிய ரயில்வே பாலத்தின் பணிக்காக கேரளாவில் […]
