சாப்பிட்ட பானி பூரிக்கு பணம் கேட்டதால் கடைக்காரரின் கழுத்தை இளைஞர்கள் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் விரேந்தர் பால் . இவர் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம்போல் விரேந்தர் பால் மாலையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் பானிபூரியை சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் சென்றுள்ளனர். சாப்பிட்ட பானிபூரிக்கு விரேந்தர் பால் பணம் கேட்டுள்ளார். பணம் கேட்டதால் குடிபோதையில் இருந்த மூவரும் ஆத்திரமடைந்து […]
