குஜராத்தில் பாதுகாப்பு பணியில் இருப்பதால் வீட்டில் தனியாக இருக்கும் தனது 89 வயது தாயாருக்கு மருத்துவ உதவிகள் தேவை என ட்விட்டரில் கோரிக்கை விடுத்த ரவிக்குமார் என்பவருக்கு முதல்வர் பழனிசாமி உடனடியாக உதவி அளித்துள்ளார். ரவிக்குமார் என்பவர் குஜராத்தில் பாதுகாப்பு பணியில் உள்ளார். இவர் தனது ட்விட்டரில், ஐயா நான் மத்திய பாதுகாப்பு படையில் குஜராத் அகமதாபாத்தில் பணியில் உள்ளேன். எனது தாயார் 89 வயது வீட்டில் தனியாக உள்ளார் உடல் நிலை சரியில்லை. எனக்கு தந்தையும் […]
