தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமாக 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் திரு. சந்திரசேகரராவ் அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஹைதராபாத்தில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மழை வெள்ளத்தால் […]
