யாழ்ப்பாணம் தீவில் கரை ஒதுங்கிய கடலில் மாயமான ராமேஸ்வர மீனவரின் உடலை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த புதன்கிழமை காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது இரவு கச்சத்தீவிற்க்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் படகில் இருந்து கார்சன் நிலைதடுமாறி நடு கடலில் விழுந்து மாயமானார். இதனையடுத்து ராமேஸ்வர மீன்வளத்துறை […]
