கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடத்த 2021-ம் ஆண்டு தன்னுடைய 46-வது வயதில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவர் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் கர்நாடக அரசு புனித் ராஜ்குமாருக்கு உயரிய கர்நாடகா ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் கன்னட மொழிக்காகவும், கர்நாடகா மாநிலத்துக்காகவும் நிறைய தொண்டுகளை செய்துள்ளார். […]
