இந்திய பாடகியான அருணா அவர்களுக்கு பிரான்ஸ் உயரிய விருதொன்று வழங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதுக்காக இந்திய நாட்டை சேர்ந்த கர்நாடகா இசை பாடகியான அருணா சாய்ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கர்நாடக இசை பாடகி, இசையமைப்பாளர், மனிதநேயர் மற்றும் பேச்சாளர் என பன்முகத் திறமை கொண்டவராவார். இந்த விருதானது அவர் சார்ந்த துறைக்காக மட்டுமல்ல இந்தோ பிரான்ஸ் உறவுகள் மேம்படுவதில் அவரது பங்களிப்பிற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டு தூதரான […]
