சொத்து வரி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பா.ஜ.க சார்பில் போராட்டம் நடைபெற்றது. இவர்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் போது தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மேலும் இந்த போராட்டத்தில் பா.ஜ.க […]
