பீகார் மாநிலத்தில் உள்ள மேற்கு சம்பரன் மாவட்டத்தில் ஹர்டியா என்னும் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் பாஜக கட்சியை சேர்ந்த அமைச்சர் நாராயன் பிரசாத்துக்கு சொந்தமான இடத்தில் சிறுவர்கள் மட்டை பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். இதைக் கண்டு ஆத்திரமடைந்த அமைச்சருடைய மகன் பப்லு குமார் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து சிறுவர்களை பயமுறுத்துவதற்காக வானத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். மேலும் சிறுவர்களை பலமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் சிலர் காயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் […]
