தமிழகத்தின் பிரதான கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தங்கள் ஆதரவாளர்களுடன் நேரடியாகவே மோதிக் கொள்வதால் அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வந்தார். ஆனால் தற்போது டெல்லி உச்சநீதிமன்றம் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு […]
