பாஜக ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருக்கோவிலூர் தொகுதி பாஜக வேட்பாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருக்கோவிலூர் தொகுதி பாஜக வேட்பாளர் கலிவரதன் கடந்த 8ஆம் தேதி திருவெண்ணைநல்லூர் ஒன்றிய செயலாளர் பிரபுவிடம் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து தொலைபேசியில் கேட்டிருக்கிறார். அப்பொழுது இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கலிவரதன் தனது ஆதரவாளர்களுடன் பிரபுவின் வீட்டிற்கு சென்று மிரட்டியதோடு பிரபுவின் மனைவி செல்லம்மாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. […]
