இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு யோகி ஆதித்யநாத் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது உனா மாவட்டத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய போது, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா பல்வேறு உச்சங்களை தொட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் நாட்டின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது. மேலும் நாட்டின் பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாக இருக்கும் மத்திய பாஜக அரசு நாட்டின் எதிரிகளை துல்லிய தாக்குதல்கள் மூலமாக அளித்தது. இதனை அடுத்து நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்து […]
