ஆப்கானிஸ்தானின் தலைநகரில் பாகிஸ்தானை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தின் முன்பு நேற்று இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது. ஆப்கானிஸ்தான் நாட்டின் விவகாரங்களில் பாகிஸ்தான் அரசு தலையிடக்கூடாது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் பெண்களால் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை ஊடகத்தை சேர்ந்த சிலர் வீடியோ எடுப்பதை தலிபான்கள் தடுத்துள்ளனர். அதாவது, பாகிஸ்தானின் உள்நாட்டு புலனாய்வுத் துறையின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் காபூல் நகருக்கு வந்ததையடுத்து இந்த […]
