பாகிஸ்தான் நாட்டின் புகழ் பாடும் பாடலை கேட்டதற்காக 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பூட்டா பகுதியிலுள்ள சிங்கை முராவன் கிராமத்தில் முஸ்த்கீம், நயீம் சிறுவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் தன்னுடைய அத்தை கடையில் அமர்ந்து பாகிஸ்தான் நாட்டின் புகழ் பாடும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற பாடலை கைப்பேசியில் கேட்டுள்ளனர். இதைக்கேட்ட ஆஷிஸ் என்பவர் 2 சிறுவர்களையும் எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் ஆஷிஸ் உடன் […]
