ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று நாடு திரும்பியுள்ள வாள்ச் சண்டை வீராங்கனை பவானி தேவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ‘’இப்போதுதான் முதன்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்று இருக்கிறேன். இந்தியாவிலிருந்தும் வாள்வீச்சு போட்டியில் முதன்முதலாக பங்கேற்றதும் நான்தான். இது எனக்கும் தமிழகத்தும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது. ஒலிம்பிக்கிற்கு செல்வதற்கு முன்பே தேர்வான அனைவரிடமும் இரண்டு முறை பேசி தேவையான உதவிகளை வழங்குவதாக முதல்வர் உறுதியளித்திருந்தார். இன்று அவரை சந்தித்து நான் ஒலிம்பிக்கில் […]
