பட்டப்பகலில் பழ கடைக்காரர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புது அப்பனேரி கஜேந்திர வரதர் பகுதியில் திருவேங்கட ராமானுஜம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் இளையரசனேந்தல் பகுதியில் சொந்தமாக பழக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் திருவேங்கட ராமானுஜம் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு பழ கடைக்கு சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது அங்கு வீட்டின் முன் பகுதியில் […]
