கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பகுதியில் கடல் அலைகள் நேற்று முன்தினம் பச்சை நிறத்தில் காணப்பட்டதோடு துர்நாற்றம் வீசியது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கடல் நீரின் நிறம் மாறியதற்கு பூங்கோரை பாசிகள் தான் காரணமா? அல்லது ரசாயன கழிவுகள் காரணமா? என மீன்வளத்துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நேற்று கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய மீனவர்கள் மீன் குஞ்சுகள் கடலில் செத்து மிதப்பதை […]
