தொழிலாளியை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பழையபாலக்கரை பகுதியில் புதியதாக ஓட்டல் திறப்பதற்கு மராமத்து பணிகள் நடைபெற்றது. அந்த ஓட்டலில் மரவேலைகளை காளிமுத்து நகரைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்தக் கடைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கும்பகோணம் சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லைவளவன் வந்துள்ளார். அவர் ஹரிஹரனிம் இங்கே யார் ஓட்டல் திறப்பது எனக் கேட்டு தனது ஆதரவாளர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. […]
