திண்டுக்கல் மாவட்டம் பழனியிலிருந்து தாராபுரம் போகக்கூடிய சாலையில் 4 கிலோ மீட்டர் தூரம் ரூபாய் 3 கோடியில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ள நெடுஞ்சாலைதுறை முடிவு செய்தது. இந்நிலையில் மானூர் கிராமத்தில் சாலை ஓரத்தில் வளர்ந்திருந்த நூறு வருடங்கள் பழமையான மரங்களை சாலை விரிவாக்கத்திற்காக வெட்டவேண்டிய சூழ்நிலை உருவாகியது. இதனால் கிராம மக்கள் மரங்களை வெட்டாமல் விரிவாக்கபணி மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் கோரிக்கை மனு கொடுத்தனர். அவற்றில் பழனிக்கு தைப்பூசம், பங்குனி உத்திர திருவிழா காலங்களில் […]
