கர்நாடகா மாநிலத்திலுள்ள தக்சின கன்னடா மாவட்டத்தில் கிராம வாசிகள் 9 பேர் பழங்குடி பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்தரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பெத்தலகண்டி தாலுக்காவைச் சேர்ந்த குரிபல்லா எனும் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியன்று இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது, கிராமத்தைச் சேர்ந்த சந்தீப், சந்தோஷ், குலாபி, சுகுனா, குஸ்மா, லோகய்யா, அணில், லலிதா, சென்னகேசவா போன்றோர் மீது 35 பழங்குடி பெண்ணை தாக்கிய குற்றச்சாட்டில் […]
