அரசு பழங்குடியினர் மேல்நிலைபள்ளி மற்றும் விடுதியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள முள்ளுகுறிச்சியில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் திடீரென அந்த பள்ளிக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பள்ளியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா எனவும், வகுப்பறைகளில் கிருமிநாசினிகள் வைக்கப்பட்டுள்ளதா எனவும் பார்வையிட்டார். இதனையடுத்து பள்ளியில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் […]
