பழங்குடியின பெண்களின் நடன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை அருகே செம்மேட்டில் வல்வில் ஓரியரங்ககு அமைந்துள்ளது. இங்கு உலக பழங்குடியினர் தின விழா மற்றும் கலாச்சார விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா தமிழ்நாடு செக்யூல்டு ட்ரைவ் பேரவை சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பழங்குடியின பெண்களின் நடன் நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சி, நாட்டுப்புற நடனம், நாடகம், சிலம்பம், போன்றவைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு நடனமாடி அசத்தினார்.
