கொங்கராயகுறிச்சியில் பழங்கால 2 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றின் வடபகுதியில் அமைந்துள்ள கொங்கராயகுறிச்சியில் பழமைவாய்ந்த வலம்புரி விநாயகர் கோவில், வீரபாண்டீசுவரர் கோவில் உள்ளன. இந்நிலையில் வலம்புரி விநாயகர் கோவில் நுழைவாயில் பகுதியில் பழங்கால 2 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கல்வெட்டு 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும், மற்றொரு கல்வெட்டு 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவை வட்டெழுத்தில் […]
