பழக்கடைகளை சேதப்படுத்திய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து, நகராட்சி நிர்வாக ஆணையர், வாணியம்பாடி நகராட்சி ஆணையர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணைய பொறுப்பு தலைவர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். வாணியம்பாடியில் கடந்த 12ம் தேதி காலையில் பழவியாபாரம் செய்து கொண்டிருந்தவர்களின் பழங்களை வீதியில் வீசியும், தள்ளுவண்டிகளை நகராட்சி ஆணையர் கவிழ்த்து விட்டார். […]
