நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் பள்ளி தலைமையாசிரியர், தாளாளர் மற்றும் கட்டிட ஒப்பந்ததாரருக்கு நெல்லை நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 17ம் தேதி காலை 10.50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி டி. விஸ்வரஞ்சன், கே.அன்பழகன் மற்றும் ஆர். சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். […]
