குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. பள்ளி வாகனங்கள் விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதிகள் : அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியான வாகன விதிமுறைகள் இருக்க வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோக்கள் […]
