செய்முறை தேர்வு என கூறி அழைத்துச்சென்று கிச்சடி யில் போதை மருந்து கலந்து கொடுத்து 17 பள்ளி மாணவிகள் “துஷ்பிரயோகம்” செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் 2 தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இங்கு படித்து வரும் 10-வகுப்பு மாணவிகள் 17 பேரை கடந்த நவம்பர் 18-ஆம் தேதி பள்ளியின் மேலாளர்கள் செய்முறை தேர்வு என கூறி அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அந்த மாணவிகளுக்கு கிச்சடி உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. […]
