ஜூலை 14ஆம் தேதி முதல் மாணவர்களின் வீட்டிற்கே புத்தகங்களை கொண்டு வழங்குவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுக்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் என முதலில் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்த நிலையில், பெரும்பாலான மாணவர்களின் வீட்டில் இணையம் மற்றும் மொபைல் வசதிகள் இல்லாத […]
