நாகை நாகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பாடம் நடத்தியுள்ளார். தேசிய குடற்புழு நீக்க வார முகாம் நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்றது. இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்துள்ளார். இந்த முகாமை முடித்து விட்டு கலெக்டர் அதே பள்ளியில் உள்ள பன்னிரெண்டாம் வகுப்பிற்கு சென்றுள்ளார். உடனே பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரும், மாணவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களிடம் என்ன பாடம் படிக்கிறீர்கள்? எப்படி படிக்கிறீர்கள்? […]
