பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் மாதவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சரவணகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாலையில் வீடு திரும்பிய சரவணகுமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணகுமாரின் […]
