கர்நாடக மாநிலத்தில் வகுப்பில் டிரவுசரில் மலம் கழித்த சிறுவன் மீது ஆசிரியர் கொதிக்கும் நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ராய்ச்சூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. செப்டம்பர் இரண்டாம் தேதி நடந்த இந்த சம்பவம் நேற்று தெரியவந்துள்ளது. ராய்ச்சுரு மாவட்டத்தில் உள்ள மஸ்கியில் உள்ள ஸ்ரீ கணமதேஸ்வரா தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவன் மீது, ஆசிரியர் ஹுலிகேப்பா, கொதிக்கும் நீரை ஊற்றி கொடூரமாக நடந்துள்ளார். 40% தீக்காயம் அடைந்த சிறுவன் […]
