பள்ளியில் மரம் முறிந்து விழுந்ததால் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கண்ணாடிபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 18 மாணவிகள் மற்றும் 4 மாணவர்கள் என மொத்தம் 22 பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் முன்பு இருந்த பழமையான மரம் ஒன்று அதிகாலையில் திடீரென முறிந்து பள்ளியின் கட்டிடத்தின் மீது விழுந்துள்ளது. இதனைஅடுத்து பள்ளியை சுத்தம் செய்வதற்காக வந்த பணியாளர்கள் மரம் முறிந்து […]
