வள்ளிமலையில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் பள்ளி மேலாண்மைக் குழு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் அனைத்துப்பள்ளிகளிலும் நடைபெற்றது. இதேபோல் வேலூர் மாவட்டம் வள்ளிமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே பெற்றோர்கள் பள்ளியில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எந்த ஒருஅடிப்படை வசதிகள் சரியில்லை என்று கூட்டத்தை புறக்கணித்து […]
