மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டில் வர்ஜீனியா பகுதியில் ஹெரிட்டேஜ் என்னும் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று மதிய வேளையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான 19 வயது இளம் பெண்ணை கைது செய்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 17 வயதுடைய மாணவனுக்கு முகத்திலும் 17 வயதுடைய மாணவிக்கு […]
